<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 21, 2004
 
# 63 பெளர்ணமி முகம்
ஆண்:
பெளர்ணமி முகம் கொண்டாய் நீ
பல்லவன் சிலை உந்தன் மேனி
யாழிசை மீட்டச் சொல்வேன்
அஞ்சனம் தீட்டச் சொல்வேன்
உன் பதி இனி நானடி

(பெளர்ணமி...

பெண்:
சாரதி இல்லாது ஓடும் தேர்தான்
இன்று என் கதி
மாரணைக்கும்போதும் கேட்டேன்
உந்தன் நெஞ்சில் போர் மணி

ஆண்:
வாழ்விருக்கும்போது ஏனோ தீங்கினை எண்ணினாய்
கோழைகளின் சாவில் என்றும் ஜீவன் இல்லை
எண்ணுவாய்

பெண்:
வஞ்சி நான் வந்தேன் உனக்காக
வஞ்சனை எண்ணம் எதற்காக?

ஆண்:
கண்களில் உன்னைக் கொண்டு வைத்தேன்
கண்ணில் நீர் என்றால் என்ன செய்வேன்?

(பெளர்ணமி...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com