<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 21, 2004
 
# 61 சாய்வானத்தில்
ஆண்:
சாய்வானத்தில் சுடர் தேயுது இனி காதல் பரிமாறவா?

பெண்:
சொற்கள் கேட்டுப் பார்க்கும் சீர்களை
இந்தக் கண்கள் ஊட்டிவிடும்

(சாய்வானத்தில்...

ஆண்:
சந்திர திலகம் சூடுது வானம்
மந்திரப் புகையாய் சூழுது மோகம்

பெண்:
மங்கை மனதின் மகுடாதிபதி
மனதை இழந்தேன் உந்தன் கண் கருதி

(சாய்வானத்தில்...

பெண்:
கார்குழல் அவிழ்ந்தது கைவிரல் கோதி
மார்கழி வாடையை மறக்குது மேனி

ஆண்:
இளமை இரவில் இரு மின் மினிகள்
இரவல் வாங்கும் இல்லற சுகங்கள்

(சாய்வானத்தில்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com