<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 21, 2004
 
# 60 உறவளிப்பாயோ உறவழிப்பாயோ?
உறவளிப்பாயோ உறவழிப்பாயோ?
விடை தெரியாமல் மலர்களைக் கொய்தேன்
மயக்கவும் மலர்கள் மறக்கவும் மலர்கள்
தீர்ப்பென்ன கூறடி

கண் இமை வேளிக்குள் காதலை சிறை வைத்தால் ஆகுமா?
காதலின் அம்புகள் எய்தவன் குறி தப்பும்
கேலியா வெறும் கேலியா?
காதல் கொண்ட ஜீவன் எந்தன் உயிர் ஆவி நீயடி
நிராசையாய்ப் போனால் நானும் நீராவி தானடி

(உறவளிப்பாயோ...

இசையின் பிழை காதறியும் இதயப் பிழை யாரறிவார்?
தவறென்றால் காதல் ஏன் தோன்றுதடி?
அப்பாவி ஆசைப்பட்டேன் அந்நாந்து பார்த்துவிட்டேன்
நிலத்தில்தான் என்றும் உண்டு ஈறமடி

நீ நிலவு தூரத்தில் நின்றால்
நான் கடலின் ஓரத்தில் செல்வேன்
இந்தக் காதல் வானிலே ஏணியிட
ஒரு முறை சொல்வாயோ சம்மதமென்று

(உறவளிப்பாயோ...

சதுரங்க ஆட்டத்திலே அரசன் ஒரு மூலையிலே
அரசி உன் வருகை தேடி வாடுகிறேன்
என் ராணி நீயென்று இதுவரை எண்ணிவிட்டேன்
எதிர்ப்படை ராணியென்று ஆகிடுமோ?

மனம் போரைத் தாங்கிடும் களமா?
நீ அமைதிப் படைகளின் இனமா?
ஒரு வார்த்தை சொல்ல பல யுகங்கள் சென்று
இனி முடிவில்லாமல் என் விடிவும் இல்லை

(உறவளிப்பாயோ...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com