<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 21, 2004
 
# 59 சிறகாய் விறியும் என் காதல் நெஞ்சு
பெண்:
சிறகாய் விறியும் என் காதல் நெஞ்சு
உந்தன் உடைமை என் உள்ளம் என்று
உரிமை பயிலும் உன் கண்கள் ரெண்டில்
விழுந்தேன் மீணாய் நீ இன்பத் தூண்டில்

ஆண்:
சிங்காரப் பூச்சூடி அம்மன் சிலைபோலே
கைகூப்ப வைத்தாயே காதல் அருளாலே
இல்லாத வேதனை கொண்டாடும் கண்கள்
இருப்பது மெய்யென்றே கொண்டாடும் கைகள்

பெண்:
அகம் ஒன்று புரம் ஒன்று நிலை வாராதே இங்கு
துணை உன்னையன்றி போனால் உயிர் வாழாதே நெஞ்சு

(சிறகாய்...

ஆண்:
கடல் சேரும் வானத்தை கண்டேன் கன்னத்தில்,

பெண்:
கரை சேர்க்கும் தேக்கினை கண்டேன் தோற்றத்தில்.

ஆண்:
சந்தத்தைச் சேரத்தான் வார்த்தை பாவாகும்,

பெண்:
நெஞ்சத்தைச் சேரத்தான் மொட்டு பூவாகும்.

ஆண்:
தடை வென்று துணை கொண்டு திரை கடலை தாண்டத்தான்,

பெண்:
மனம் அஞ்சும் பின் கெஞ்சும் இழுபறியும் இன்பம்தான்.

(சிறகாய்...

| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com