<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 21, 2004
 
# 58 அதரம் துடிப்பது
ஆண்:
அதரம் துடிப்பது
அழைப்பா? கூச்சமா?

பெண்:
விரகம் இயற்கையா?
பெற்றதா? பயின்றதா சொல்லேன்?

(அதரம்...

ஆண்:
உணர்ச்சி தொடங்கியது மூதாட்கள் முன்னமே,

பெண்:
பகிர்ந்து கொள்வதில் பாகுபாடு இல்லையே,

ஆண்:
தேகம் அணை நான் ஆறிட,

பெண்:
தீபம் அனை இருள் சூழ்ந்திட,

ஆண்:
நிலவின் ஒளியில்,

பெண்:
நிழலின் நடனம்,

ஆண்:
மார்கழியின் மூச்சு ஈரமா?

(அதரம்...

பெண்:
கிணற்றுத் தண்ணியென வாறி இறைத்த இன்பமே,

ஆண்:
துவட்டும் கைவிரலில் தவழும் மேனி நிலமே,

பெண்:
ஆசை விதை பயிரானது,

ஆண்:
ஆற்றல் மிக அழகானது,

பெண்:
விரைவாய் விரைவாய்,

ஆண்:
விருந்தைப் பெறுவாய்,

பெண்:
யுக சாந்தி கண்ட எண்ணமே.

(அதரம்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com