<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, April 20, 2004
 
# 57 குரும்பு விழி அழகே
ஆண்:
குரும்பு விழி அழகே
நீ குறு குறுத்துப் பார்க்கையிலே
நான் இத்தனை நாள் காத்துவந்த
பெண் விரதம் தீக்கப்போறேன்
இந்த புள்ளி மான் மேனியெங்கும்
கோலமிட்டுப் பாக்கப்போறேன்

பெண்:
கண் அருகே வேர்ப்பதெல்லாம்
கண்ணீரு ஆகிடுமா?
சந்தோஷம் தாங்கமுடியாம
தவிப்பதும் ஒரு சுமையே
நீ உச்சரிக்க பேரு வெச்சேன்
தொட்டு உழுதிட ஏரு வெச்சேன்
இனி கட்டுச்சோறு கொண்டு வந்து
ஊட்டிவிடும் வேளை வருமா?
அந்த நல்ல தினம் வந்துவிட
உன் உடம்பு பாடு படுமா?

(குரும்பு...

பெண்:
மேகம் கொண்டு வலைய பின்னிவிட்டா
நெலவு என்ன வழுக்கி விழுந்திடுமா?

ஆண்:
அமாவாசை போர்வை அனுப்பிவிட்டா
பவுர்ணமி ஒளிஞ்சு படுத்துக்குமா?

பெண்:
ஜோடி இன்றி நெலவில்லையா?
வேலி இன்றி வானில்லையா?
வலைய வரும் முத்தினத்த
எடுத்திட அவசரப்படுத்தினா
தனிமையைத் தேடி போவேன்

ஆண்:
அடி பொல்லாப்பு ஏதுக்கடி?
நீ மாராப்பை போத்திக்கடி
இனி தள்ளி நின்னு பேசிப்புட்டு
வார்த்தையால வருடு இனிமே
ஒரு எக்குத்தப்பு ஆகுமுன்னே
கண்ணும் கைய்யும் கட்டிப் போடனுமே

(குரும்பு...

ஆண்:
பல்லாக்கு தோளும் எதுக்கிருக்கு?
அன்னாந்து பாக்க தூக்கிடவா?

பெண்:
சில்மிஷத்த போதும் விட்டுடுங்க
சாமத்துக்கு நேரம் எட்டுதுங்க

ஆண்:
வெளிநாட்டு பெண்கள் எல்லாம்
உன்னாட்டம் இல்லையடி
மனசு போகும் வழியில உடம்பையும்
அனுப்பிட கூச்சம் அங்க இல்லையே

பெண்:
அட மேல்நாட்டு பெண்களுக்கு
மானமென்ன விதிவெலக்கா?
நீ சொன்ன வழி போறதுக்கு
வேறாளப் பாரு மச்சான்
நீ உச்சுகொட்டி ஜொல்லு விட
தள்ளுவண்டி தீணி நானா?

(குரும்பு...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com