உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, April 20, 2004
# 56 புகைந்தோடும் சாம்பல் எண்ணம்
புகைந்தோடும் சாம்பல் எண்ணம்
பகை தாண்டி தூங்கும் என்று
மடியேந்திப் பாடல் சொல்வேன்
மறந்தேனும் தூங்கு அன்பே
(புகைந்தோடும்...
குழந்தைப்பருவம் கண்ட அதிர்ச்சி
குமரி உன்னை குழப்பத்தில் தள்ள
குமுறி அழுதும் குழப்பம் தீரா
உணர்ச்சிக் கடலே
பிறர்போல் உனக்கிங்கு கிடைக்காதோ சாந்தம்?
உறக்கம் வந்தாலும் விறித்தாடும் எண்ணம்
மனோபாவம் புரிந்தால் கூட
மறக்காதோ நினைவை நெஞ்சே,
மறக்காதோ நினைவை நெஞ்சே
(புகைந்தோடும்...
சிதறி விழுந்த சிலையாய் உணர்ச்சி
உருதெரியாமல் உன்னை மாற்றும்
கவிதை புனைந்த கவியும் எங்கே?
கண்கள் தேடும்.
எரிமலை வெடித்தாலும் இழப்பேனோ உன்னை?
தீக்குளித்தேனும் காப்பேன் என் கண்ணை
தராசிட்டு அளந்தால் கூட
நிறை என்றும் வெள்ளும் குறையை
நிறை என்றும் வெள்ளும் குறையை
(புகைந்தோடும்...