<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, April 20, 2004
 
# 55 வாலிபம் ஆடும் கோளாட்டம்
ஆண்:
வாலிபம் ஆடும் கோளாட்டம்
வஞ்சியைத் தேடும் கண்ணோட்டம்
வான்வரை முரசொலிக்குதடி
மாணவ மனம் துடிக்குதடி

சுகம் தந்திடுவாளோ
அவள் என் இதழ் மீது?
சுவை கண்டிடுவாளோ
என் கவிதையின் மீது?

அவள் இல்லாவிடில்
விடியாதென் இரவு
கண் விளக்காகும்
அவள் வரும்போது

(வாலிபம்...

பட்டுப் பூச்சிகளின் சொர்கம் இதுதான்
சுற்றம் யாவிலும் வர்ணமயம்தான்
மொய்க்கும் வண்டுகள் வாலிப கண்களடி கண்களடி

பெண்:
செல்வம் என்பதை பிறப்பில் கண்டேன்
செல்லம் என்பதை வளர்ப்பில் கண்டேன்
காதல் என்பதை கண்டேனே உன் கண்ணில் கண்ணில்

ஆண்:
விதையிட்ட காதல் பயிரானதிங்கு
கருத்தொருமித்தால் அறுவடைதானே

பெண்:
சேர்த்துவைத்த ஆசை செலவழியும் நேரம்
பகிர்ந்துகொள்ளத்தானே ஆசை இன்னும் கூடும்?

ஆண்:
என் கனவுச்சாலைக்கு பணி ஏது
உன் கணவனாக நான் வரும்போது

பெண்:
இனி சாவு என்றொரு நிலை ஏது
நாம் சொர்கம் அடைந்தோம்
பூமியில் காதலிலே காதலிலே

ஆண்:
காதலிலே

(வாலிபம்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com