உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, April 20, 2004
# 54 தப்புவா விருட்சம் கொண்டு
பெண்:
தப்புவா விருட்சம் கொண்டு
ஆதாம் ஏவால் தப்பு செய்து
தொடங்கிய நம் இனம்
தொடர்வது தவறோ?
வினாவிற்கு விடை சொல்லு
எட்டி நின்று எண்ணம் சொல்லு
இனாமலாய்க் கிடைத்திடும்
இனிப்பல்ல நெஞ்சு
வான்மதி காய்வதேன்?
விருட்சத்தில் கூட பகை கொண்டு வைத்தான்
விருப்பத்தில் கூட பழி கொண்டு வைத்தான்
அர்த்தங்களை ஆசை மெள்ள
ஆசை வலை பின்னப் பின்ன
இதயம்தான் சிலந்தியோ
வலைக்குள்ளே யாரோ?
பாடற்குழு:
வெள்ளம் அனைதாண்டிவா
வெட்கம் விலைபேசவா
விரகம் விறகாக்கவா
விருந்தே விரைவாக வா
ஆண்:
வான்மதி காய்வதேன்?
எண்ணமெங்கும் உந்தன் பிம்பம்
ஏற்றம் கொள்ளும் எந்தன் நெஞ்சம்
நிழற்படம் நகைக்குது நிஜமென அன்பே
பெண்:
பயணமில்லாது பயணிக்கும் எண்ணம்
வேடிக்கை இன்றி புன்னகை சிந்தும்
ஆண்:
அலைகளும் கூட உன் பெயர் ஓதும்
இதயத்தின் துடிப்பில் இன்னிசை சேரும்
பெண்:
வர்ணனைக்கொவ்வாத வசியங்கள் செய்தாய்
கண்ணசைவு ஒன்றிலே கைப்பற்றிவிட்டாய்
ஆண்:
உன் முகம் பார்த்து கம்பன் இன்னும் கொதிப்பான்
இரண்டடி குறள் மீறி வள்ளுவன் உரைப்பான்
பெண்:
கவிஞர்கள் உரைத்தது காதலின் வேதம்
கணிவாகப் பேசிடு கவிதைகள் போதும்
வான்மதி காய்வதேன்?
பாடற்குழு:
வெள்ளம் அனைதாண்டிவா
வெட்கம் விலைபேசவா
விரகம் விறகாக்கவா
விருந்தே விரைவாக வா
ஆண்:
வார்த்தைகள் ஊற்றாக வருவது உன்னால்
வாசகன் போல் உன்னை விமர்சிக்கிறேன் நான்
பெண்:
உயர்வாக என்னை வைத்திருப்பாயோ?
உடன்வர நினைத்தேன் வழிபடுவாயோ?
ஆண்:
இனம்கொள்ள முடியாத இன்பத்தைக் காட்ட
உனைக்கொண்டாடிட, அது உன்னை வாட்ட
பெண்:
கிடக்குது கற்பனை கைப்பற்றிக்கொள்வாய்
உணர்ச்சிகள் காட்டிட உவமைகள் வெள்வாய்
வான்மதி காய்வதேன்?
