உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, April 20, 2004
# 52 கடலை நீங்கிய சங்குக்குள்ளே
கடலை நீங்கிய சங்குக்குள்ளே
அடைந்திருக்கும் என்றும் அலையோசை
சலனம் அடைந்த நெஞ்சுக்குள்ளே
கவனம் கலைக்கும் உன் நினைவே
யார் அடைந்தாரோ உன் பரிசை
அனுபவிப்பார் உன் கைவரிசை
துன்பம் நீக்கக் குரல் கொடுத்தேன்
நான் குரலின்றி வீசும் அலைவரிசை
(கடலை…
ஊர்கொண்டு இழுத்தால் தேராகும்
புரவிகள் இழுத்தால் போராகும்
நினைவுகள் இழுத்தே வீணாகிறேன்
என் சுயம்வரக் குதிரை நிழலினிலே
இரு மலர் வலைகள் மங்களமே
பல மலர் வலைகள் இரங்களிலே
காதல் உணர்வுகள் சமமில்லையோ?
என் ஆழத்திற்க் கிணையென நீ இல்லையோ?
(கடலை…
சாதனைப் பூவென சட்டையிலே
சொருகிடத்தானோ நான் கிடைத்தேன்?
வாடிடும் நிலையில் வீசிவிட
சமயம் வந்ததும் செய்துவிட்டாய்
உணர்ச்சிக் கடலில் மூழ்கிவிட்டேன்
முத்துக் குளிப்பதாய் எண்ணமில்லை
சதையினை மட்டும் காதலித்தாய்
அது சடலமாய்க் கிடைத்தால் என்ன செய்வாய்?
(கடலை…