உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, April 19, 2004
# 51 பூமகளே
வீசும் காற்றும் சுவையாகும்
குரல் கொடு
இல்லா சுகம் சேர்ந்திடும் இயற்கையில்
வாய்மொழிந்தால் நீ
பூமகளே...
மணல் ஆவேன் நீ வேரூண்றவா
புல்லாவேன் நீ பனி மூடவா
செந்தாமரை...செந்தாமரை கண்களில் வாழ்கிறாய்
கண்கள் நீர்குளம், எங்கும் நீந்தினாய்
பூமகளே...
நிஜமது கசந்த பின்னும் சோகமில்லையே
நினைவிற்கு செலுத்திவிட்டேன் இந்த வாழ்க்கையே
பாதைகள் மாறிட பாசம் மாறுமோ?
தள்ளி வைத்த பூவில் வாசம் நீங்குமோ?
செந்தாமரை கண்களில் வாழ்கிறாய்
நெஞ்சுக்கூட்டிலே தீயை மூட்டினாய்
கண்கள் நீர்குளம், எங்கும் நீந்தினாய்
பூமகளே...
துரைமுகம் தேடும் தோனி தத்தலிக்கையில்
கலங்கரை விளக்கம் எல்லாம் உந்தன் பாடலே
மெய் உயிர் என்றெழுத்தை யார் பிறித்தது?
கொடியினைக் கத்தரித்து யார் பூ எடுத்தது?
செந்தாமரை கண்களில் வாழ்கிறாய்
கண்கள் நீர்குளம் எங்கும் நீந்தினாய்
பூமகளே...