<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 14, 2004
 
# 50 நிலத்தில் நிரந்தரத்தை
நிலத்தில் நிரந்தரத்தை
தேடும் நப்பாசை எனக்கு

உறவில் சுதந்திரத்தை
தேடும் உரிமை உள்ளதுனக்கு

இதுதானா? சதுரங்கம் இதுதானா?

உன் முகத்தில் மறைந்திட்ட
புன்னகையின் கதை என்ன
என்றுன்னை கேட்க வந்தேன்

என் இளமை இயக்கத்தில்
உன் அழகு கிறக்கத்தில்
இருப்பதாய் என்னுகின்றாய்

உன்னைக் கண்டு துவண்டு நின்றேன்
அந்த உண்மை மறந்து சென்றாய்

இளையவனின் நெஞ்சில் சிக்கல்
ஏற்படுத்தி என்ன நக்கல்?

நினைவை மென்று
முழுங்க நினைத்தால்
மீண்டும் நிலை நிருத்துதடி விக்கல்

நிலத்தில்...

விக்காத பொருளை
விலைபேச வந்தேன்
வீணான வியாபாரமா?

முதல் கட்ட நிலையில்
தரையினில் விரிசல்
ஆரம்பம் பூகம்பமா?

நான் என்ன மேய்ச்சல் நிலமா?
மனமாற்றல் உந்தன் குனமா?

சீண்டி விட்டு தள்ளி நின்றாள்
தூண்டி விட்டு தலைமறைந்தாள்

இருட்டுக் கடலில் மிதந்து தவிக்கும்
இதயம் தேடுது உன் கலங்கரை விளக்கம்

நிலத்தில்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com