<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 14, 2004
 
# 49 தாழம்பூவா நீ
தாழம்பூவா நீ தள்ளி வைத்தாலும்
வாசம் என்னருகே வீசுதடி
என்னத்தில் ஊறும் இன்பத்தின் சாரம்
துன்பத்தில்தானோ இன்பத்தின் ஈரம்
கொண்டாடிடும் பேதை மனம் ஏன்? ஏன்?

(தாழம்பூவா...

சொல் இழந்த பாடலாய் சந்தம் மட்டும் வாழ்வதா?
காதல் வரி படித்த கண் கண்ணீர் வரி வடிப்பதா?
கொள்கைகளின் மோதலில் கொண்டவனை பிறிப்பதா?
கொன்றெரித்த பினங்களில் கொள்கை வெற்றி கிடைத்ததா?
மூன்று முடி போட்டவன்
நூலிலாடும் பொம்மை
ரெண்டுபட்ட நாட்டில்
நிரபராதி இல்லை
கொள்கைக் கணல் காதல் திரி ஏற்றாதடி

(தாழம்பூவா...

சொந்தமென்று வந்தபின்
தேச பக்தி வாழுமா?
ஏர்முனைக்கும் வாள்முனைக்கும்
காதல் இனையாகுமா?
இன வெறிக் கலவரத்தில்
நில வெறி சேர்ந்ததால்
நாடு ரெண்டு மோதையில்,
நெஞ்சம் ரெண்டு சேர்வதா?
முகவரி இல்லாது போனதடி காதல்
முற்றுப்புள்ளி வரும்வரை உன் நெற்றிப்புள்ளி வாழ்தல்
சந்தேகம்தான்
என் வாழ்வை நீ வாழ்வாய்!

(தாழம்பூவா...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com