<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 14, 2004
 
# 48 மேகம் திரை போடும் நிலவே
அவன்:
மேகம் திரை போடும் நிலவே நிலவே
பொங்கும் அலைகளாக என் மனம்
உன்னைத் தேடிப் பாயுதே

மேகம் திரை போடும் நிலவே நிலவே
மோகப்பார்வை கொண்டு தாக்கிட
இந்த நிலவும் கொதிக்குமே

அவள்:
மேகம் திரை போடும் நிலவே நிலவே
மோகப்பார்வை கொண்டு தாக்கிட
இந்த நிலவும் கொதிக்குமே

அவன்:
பூவைத் தீண்டும் வானொளி
இருளை போக்கவா?
பாலாடை நீக்கி பால் நிலாவை
பருகிப் பார்க்கவா?

அவள்:
தள்ளி நின்று பார்ப்பது
தூண்டும் ஆசையில்
வாராமலே நான் வாழ்கிறேன்
உன் நினைவுக் கூடத்தில்

அவன்:
தயக்கம் முகிலோ
அது தூறலாகும் வேளை பார்த்து தோகை ஆடுவேன்

அவள்:
மேகம் திரை...

அவள்:
சூண்யமாகிப் போய்விடும்
சிற்றின்பம் காதலா?
சூடாறிட நீராடிட
நான் தேகத் தேவையா?

அவன்: ஆடவர்கள் யாவரும்
உன் எண்ணம் போலவா?
உன்னை பாதுகாக்க வந்த கையை
பழிக்கலாகுமா?

அவள்:
முறையோ தவறோ
இந்தப் பூவின் கண்ணில் கைகளெல்லாம் பறிக்கவந்ததே

| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com