<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, April 12, 2004
 
# 46 பாசத்தின் இயற்பெயர்தானா அம்மா
பாசத்தின் இயற்பெயர்தானா அம்மா
பலனின்றி பணி செய்வதின் பொருல்தான் அம்மா
சாகசங்கள் கோடி செய்தும்
தாயின் அன்பிற்கு ஈடாக
ஏது செய்தாய்?

(பாசத்தின்...

பிள்ளைக் கடவுளை வழிபட நேர்ந்தாலும்
அவன் அன்னை அன்பிற்கு அடிமை அன்றோ
மதம் என்ன குலம் என்ன நிறம் என்ன மனிதர்கள்
மறக்காமல் போற்றிட அவள்தான் என்றும்
கடிந்தாலும் சிரித்தாலும் கண்ணீரை வடித்தாலும்
அவள் காட்டும் வழி என்றும் சீரானதே
மனிதாபிமானத்தின் உள்ளர்த்தம் அவள்தானே
அடைகாத்து அவள் ஈன்ற பொருள் நீயடா

உடலாக உயிராக
பிரசவித்த தாய்க்கென்றும் பூஜை

(பாசத்தின்...

எங்கெங்கும் இருக்கின்ற தெய்வத்தின் வடிவத்தை
அன்னையின் உருவத்தில் நீ காண்கிறாய்
சுயம் என்ற சொல் என்றும் அவள் நாவில் உதிக்காது
சேய் என்ற சூழலில் அவள் எண்ணமே
உனக்கென்ற எதிர்பார்ப்பு உனக்கில்லை என்றாலும்
அவள் கனவை நிறைவேற்ற செயலாற்றுவாய்
அவள் தொடங்கும் நல்லெண்ணம் உனைத் தொடரும் பெருந்தன்மை
உன் சிசுவும் உனக்கென்று செயலாற்றுவார்
இயல்பான சுக நீதி
தொடங்கிய திரு உள்ளம் தாயே

| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com