<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, April 12, 2004
 
# 44 கண்ணாலே பேசும் காதல் பொழுதா?
பெண்:
கண்ணாலே பேசும் காதல் பொழுதா?
கன்னத்தில் விருதா?
இதழ்கள் தருதா?
எண்ணங்கள் இனிதா?
எந்நாளும் உனதா?

ஆண்:
காதலை ஈன்ற காமனின் மகளோ?
காதலை ஈர்க்கும் காந்தம் உன் விழியோ?
மறைந்தது கதிரோ கதிரவன் புகழோ?
கனவிது பகலோ?

(கண்ணாலே பேசும்…

பெண்:
ஆதவன் இழந்த புகழை நான் பெறவோ?
காலம் கடந்தால் என் நிலை அதுவோ?
புகழ்ந்திடும் மனிதா
உணர்வது அறிதா?
காலத்தின் விழுதா?

(கண்ணாலே பேசும்…

ஆண்:
புன்னகை இனத்தில் சஞ்சலம் புதிதா?
புகழ்வதாலே சந்தேகம் வருதா?

பெண்:
அனைத்திடும் கைகள்
அணையென ஆகும்
அனைத்திரு நாளும்

ஆண்:
கண்ணாலே பேசும் காதல் பொழுதா?

பெண்:
கன்னத்தில் விருதா?

ஆண்:
இதழ்கள் தருதா?

இணைந்து:
எண்ணங்கள் இனிதா?
எந்நாளும் உனதா?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com