<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 09, 2004
 
# 40 கானத்தில் நிலைமறந்து
ஆண்:
கானத்தில் நிலைமறந்து
காதலை வருடுகின்றேன்
திராட்சைக்கொடி மேலிருக்க
தாகமாய் ஏங்குகின்றேன்

(கானத்தில்...

பெண்:
பந்தலிட்டு நிழல் கொடுத்தால்
பருகிட நறிகள் வரும்
கோலமயில் ஆடக்கண்டால்
சோலையெங்கும் தேன் கசியும்

பட்டுப்பூச்சி படபடக்க
பூவின் மடி இடம் கொடுக்கும்

(கானத்தில்...

ஆண்:
வெப்பத்தில் சமைத்ததம்மா
வாலிப உணர்ச்சியெல்லாம்
வழங்குதல் பெறுதல் ரெண்டும்
உறவுக்கு வழிகளம்மா

எந்தப்புரம் நீ வசிப்பாய்
அந்தப்புரம் நான் இருப்பேன்

(கானத்தில்...

பெண்:
அந்தப்புர ஆசையெல்லாம்
நகர்த்துங்கள் அந்தப்புரம்
வெளிப்படை ஆனதனால்
வெட்கமா விலகிவிடும்

உண்மை அன்பு கிடைத்த பின்பே
பெண்மை மனம் பறிகொடுக்கும்

(கானத்தில்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com