உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
#4 காலைப்பனியே அது சுவைக்கும் பூவின் இதழே
காலைப்பனியே அது சுவைக்கும் பூவின் இதழே
காணச் சுவையே இயற்கையே அழியா கலையே
சாலை முழுதும் பெருகி வரும் சேலை நதியே
நீந்திக் குளித்தால் அதுவும் இயற்கை நிலையே
எனை மயக்கும்
காலைப்பனியே அது சுவைக்கும் பூவின் இதழே
காணச் சுவையே இயற்கையே அழியா கலையே
-----------
சிந்தும் மழைத் துளி கவிதை வரிகளோ
மேகம் பூமிக்கு எழுதிய மொழிகளோ
------------
சிந்தும் மழைத் துளி கவிதை வரிகளோ
மேகம் பூமிக்கு எழுதிய மொழிகளோ
வளைந்திடும் வானவில்லின் அம்பை அறிவாயோ
அலைந்திடும் மேகக்கூட்டின் எல்லை அறிவாயோ
பார்த்ததும் காதல் வந்தால் அனுமதிப்பாயோ
ஒரு புது யுகம் மலருது கவனத்தை கவருது
காலைப்பனியே அது சுவைக்கும் பூவின் இதழே
காணச் சுவையே இயற்கையே அழியா கலையே
-----------
சிந்தும் மழைத் துளி கவிதை வரிகளோ
மேகம் பூமிக்கு எழுதிய மொழிகளோ
------------
சிந்தும் மழைத் துளி கவிதை வரிகளோ
மேகம் பூமிக்கு எழுதிய மொழிகளோ
இயற்கையே காதல் கொள்ள நீயும் பிறந்தாயோ
இயற்கையே காதல் கொள்ள நீயும் பிறந்தாயோ
உனைத் தொட காமன் வந்தால் அனுமதிப்பாயோ
ஒரு புது யுகம் மலருது கவனத்தை கவருது
காலைப்பனியே அது சுவைக்கும் பூவின் இதழே
காணச் சுவையே இயற்கையே அழியா கலையே
சாலை முழுதும் பெருகி வரும் சேலை நதியே
நீந்திக் குளித்தால் அதுவும் இயற்கை நிலையே
எனை மயக்கும்
காலைப்பனியே அது சுவைக்கும் பூவின் இதழே
காணச் சுவையே இயற்கையே அழியா கலையே
Comments:
Post a Comment
