<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 09, 2004
 
# 39 தப்புத்தான் தப்புத்தான்
தப்புத்தான் தப்புத்தான்
வேட்டையாடி வளைச்சது

வேடன் நான் உனைப்பிறித்த
மூடன் நான்

கூடவா உன் குடும்பத்தில்
கூடவா

இந்த முறை நான்
வேடம் கலைந்தேன்
வேட்டைப் பொருளை
மீட்டுக் கொடுப்பேன்

(தப்புத்தான் தப்புத்தான்...

ஊரெங்கும் கேட்குது உன் முழக்கம்
வீண் வம்பு என்றும் அது உன் பழக்கம்
அன்னையிடம் உன்னை கொண்டு சேர்ப்பது
பாவத்திற்க்கு பரிகாரம் கேட்பது

தெய்வத்திற்கே முகம் கொடுத்தவன்
தும்பிக்கையால் வாழ்த்து அளிப்பவன்

சண்டித்தனம் பன்னுவதை மறந்திடுவாயா

(தப்புத்தான் தப்புத்தான்

தாழ்வான எண்ணத்திலே நடக்கலை
தவறாக தெரிந்ததும் பொருக்கலை
வேடிக்கையாக வேட்டையாடினான்
வினையாக வந்ததேன் வினாயகா

மண்ணிப்பது உந்தன் மறபிலே
மனிதனின் பிழை படைப்பிலே

உருவம் போலே உள்ளத்தையும் பெரிது பன்னு தோழா

(தப்புத்தான் தப்புத்தான்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com