<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 09, 2004
 
# 38 ஊதக் காத்து வீசும்
பெண்:
ஊதக் காத்து வீசும்
உடல் உள்ளம் எங்கும் கூசும்
புதிதாய் புலப்படும்
கனவாய் முலைவிடும்
நட்பல்ல வேற் நிலை

(ஊத...

நடன நயத்தை
அவன் விரல்கள் வரைந்திட
இதய தலத்தில்
ஒரு சிறகு விறிந்ததே

பரந்த வான்வெளி
விடலை பைங்கிளி

கலைஞன் என்று நோக்குமோ?
காதலென்று பார்க்குமோ?

ஆண்:
இரண்டும் ஒன்று சேர்க்குமோ?

(ஊத...

கலைஞன் மனதில்
கலைவாணி நீயடி
என்னுள் மா தவிப்பு
உன்னால் மாதவி

பெண்:
தென்றல் வாசமே
பூவின் சுவாசமே

கசிந்த பூவில் குற்றமா?
கவர்ந்த தென்றல் குற்றமா?

ஆண்:
இது இயற்கை ஈன்ற குற்றமே

(ஊத...

| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com