<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 09, 2004
 
# 37 ஏரியில் மூழ்கிய தாமரை
ஆண்:
ஏரியில் மூழ்கிய தாமரை
சிவன் இழந்த கங்கையே
மங்கையே
நீருக்குல்லே கலந்ததேன்?
தருசெனும் நிலமது
நினைவு உரச நனையுதே
நிறையுதே

பெண்:
நினைவது இறப்பிலா?
கடந்த கால இழப்பிலா?
உறவு என்ற சொல்லின் அர்த்தம் வாழ்விலே
துறக்க வேண்டும் சோகம்
துறவுக் கோலம் போதும்
உன் வாழ்வில் என் சாவும் மோட்சமாகுமே

(ஏரியில்...

ஆண்:
பூமிக்கே வரமென
பூஜைப் பொருளாய் அமைந்தவள்
பாலை மண்ணில் ஊற்றெடுத்த பரவசம்
திங்கள் நீங்கும் வானிலே
மிண்ணல் கீற்று வெளிச்சமா?
என் வாழ்வின் அர்த்த ஜோதி அனைந்துபோனதே

(ஏரியில்...

பெண்:
தேய்பிறை வானிலே
பெளர்ணமி விரைவிலே
இருளில் வீழ்ந்து வெளிச்சம் தேடும் இதயமே
உன்னை மீறித் துன்பமோ
அத்து மீறி இன்பமோ
என்றும் சேர்வதில்லை அந்த இறைவன் ஏட்டிலே

(ஏரியில்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com