<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 09, 2004
 
# 36 புல்வெளியில் பெண்மை
ஆண்:
புல்வெளியில் பெண்மை
உள்ளமெல்லாம் மென்மை
முன் வந்த நிலவினில்
கண் படவே இல்லை
காண்பதெல்லாம் உன்னை

பெண்:
வருகை தந்ததென்ன நீயும்
வந்த நோக்கம் என்ன?
அல்லி மலர்ந்திடும் நேரம் பார்த்து
கிள்ளி நுகர்ந்திடவோ?

(புல்வெளியில்...

பெண்:
அகன்ற தோள்கள்
அழைக்கும் கண்கள்
அரசன் அவன் நடக்க

ஆண்:
ஓடை நீரில் மிதக்கும் மலர்போல்
கன்னி படர்ந்திருக்க

பெண்:
நிகழப் போவதென்ன?
நிகழ வேண்டிக் கிடப்பதென்ன?

ஆண்:
உணர்ச்சிக் கடலில் பொங்கும் அலையை
கிளரும் பருவம் மெல்ல

(புல்வெளியில்...

பெண்:
வேடன் விழியில்
வேட்டைப் பொருள் நான்
விரும்பி வழங்கிடத்தான்

ஆண்:
அடையும் சுகத்தில் ஆணின் பங்கு
பாதி சதவிகிதம்

பெண்:
குற்றம் புரியுமுன்னே
என் மேல் குற்றம் சாட்டுவதோ?

ஆண்:
கூடி மகிழ்வதில் குற்றம் இருந்தால்
காதல் சிறை படுத்து

(புல்வெளியில்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com