<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 09, 2004
 
#35 உதட்டில் சுவை உணர்வில் சுமை
பெண்:
அன்புக்கொரு அணை கட்டிவைத்தேன்
ஆசையின்மேல் குற்றம் இல்லை

ஆண்:
உதட்டில் சுவை உணர்வில் சுமை
உனை ஒன்று கேட்க வந்தேன்
சுவை கூட்டிட சுமை நீக்கிட
கரம் கோர்க்க ஓடி வந்தேன்
இதயம் அது
அசட்டுக் கருவி
உனக்கே உறுகும்
நினைவைத் தழுவி
நீ எங்கே
நிஜம் எங்கே
நிழல் போரில்
கறைந்தே
மடியும்

(உதட்டில்...

காக்கும் கரங்களுக்குக் கைவிலங்கா?
கறையும் ஒளியில் திரி ஏற்றிடவா
இல்லை அனைத்திடவா?
இரண்டும் இயலவில்லை
என்ற நிலையில் என்னை
கொன்று கூண்டோடு கிள்ளி
குறையைத் தீர்ப்பாயோ கள்ளி
உன் வாசம் இல்லாமல்
அந்தத் தென்றல் தீயடி

பெண்:
அன்புக்கொரு அணை கட்டிவைத்தேன்
ஆசையின்மேல் குற்றம் இல்லை

ஆண்:
சேர்த்த கனவை எல்லாம் சிதைத்துவிட்டாய்
சிதிலம் சிதிலம் என உடைத்துவிட்டாய்
உண்மை மறைத்துவிட்டாய்
இருந்தும் மறக்கவில்லை
மறக்க இயலவில்லை
விழிகள் ஜண்ணல்கள் ஆகும்
உள்ளத்தின் உண்மைகள் காண
உன் போக்கு மாறும் போதும்
உன் மோகம் தூய்மையாகும்

(உதட்டில்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com