<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 09, 2004
 
#34 பகலிலே தவழும் சோலையில் பனிமூட்டம்
பகலிலே தவழும் சோலையில் பனிமூட்டம்
கதிர் தொட ஓடை சிலிர்ப்பதும் ஒரு நாணம்
பகலிலே தவழும் சோலையில் பனிமூட்டம்

தேவதை போலே புகை சூழவே
ஓடினாள் உலவினாள் மான் போல்
நீந்தினாள் நதியில் தாமரை அவள் தோழி
சாமரம் மாருதம் சேர்க்காதோ

(பகலிலே...

காதோரம் கொஞ்சும் குயிலின் கானங்கள்
மலர் இதழ் அழைப்பிதழ் ஆகும்
இயற்கையின் அழகிற்க்கு இளமையும் நிகராகும்
கீழ் விழும் இலைகளும் கலை நயமே

(பகலிலே...

கோவில், மசூதி, கர்த்தர் ஆலயம்
காலையை நோக்கி வாழ்த்துப் பாடுமே
இறைவனும் சேர்ந்து துயிலெழும் காலம்
நம்பிக்கை ஓங்கிட நாள் தொடங்கும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com