<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 09, 2004
 
#33 கிள்ளிக் கிள்ளி நுகரத்தான்
பெண்:
கிள்ளிக் கிள்ளி நுகரத்தான்
மல்லி முல்லை பூக்கிறதோ
ஏனைய்யா வீணா இந்தப் போக்கு?
அன்பையளிக்கும் போர்வையிலே
கொல்லையடிக்கும் பார்வையிலே
நீ செய்யப் பாக்குற பொல்லாப்பு

ஆண்:
உள்ளம் சொல்வது ஓர் மொழியோ
உருவம் சொல்வது ஓர் மொழியோ
உன்னுள்ளே ஏன் இந்த அக்கப்போரு
மூங்கில் மரமே உன் இனமோ
மரங்கொத்திப் பறவை என் இனமோ
குழலோசை கேட்கும் நாள் கூறு

பெண்:
சஞ்சலப்படுமே பெண்மை உத்துப் பார்க்க
சந்தர்ப்பம் வருமே உன்னை என்னை சேர்க்க

ஆண்:
அட இன்று இன்றென
நாளை வேறென நினைத்துப் பார்த்தால் தோது

(கிள்ளிக் கிள்ளி...)

ஆண்:
நாம் மொட்டு விட்டும் மொட்டு விட்டும் மலரல
தொட்டு விட்டும் தொட்டு விட்டும் தொடரல
இருந்தும் இல்லை இருந்தும் இல்லை இந்த
உறவென்ன உறவென்று புரியலையே

பெண்:
உன் சித்தம் போல சித்தம் போல என்னை
விருந்துபோல வழங்கிவிட்ட போது நீயும்
பித்தம் தெளிஞ்சு பித்தம் தெளிஞ்சு பின்னே
என்னை மதிக்கனுமே

ஆண்:
கூட்டுக்கிளிகளும் காக்கை குருவியும்
காதல் பேசுமே

பெண்:
நீ மனித வாழ்கையின் எல்லையோடுதான்
மகிழ்ந்து வாழுமே

ஆண்:
அடி உன் தேகம் மேல்
வரும் சந்தேகமே

பெண்:
உன் எண்ண ஊற்றிலே என்னை ஊற்றிட
தீயாகுமே

(கிள்ளிக் கிள்ளி...)

பெண்:
உன் தோள்களோடு ஊஞ்சலாக என்னை
முதுகுத்தோலை மெத்தையாக்கி என்னை
இனைத்துப் பார்க்க இந்த நெஞ்சம் கொஞ்சம் ஏங்குமே

ஆண்:
இந்த ஊதக் காத்து ஊத காத்து வீசயில்
மொட்டவிழ்ந்த முல்லைப் பூக்கள் பேசயில்
உச்சி முகர்ந்து உன்னை அனைக்க உள்ளம் ஏங்குமே

பெண்:
உள்ளம் வெள்ளையாம் ஆசை கொள்ளையாம் தெரியாததா?

ஆண்:
இயற்கையானதில் இத்தனை தடை
இருக்கலாகுமா?

பெண்:
நீ கழுகு மாதிரி
நான் மெழுகு மாதிரி

ஆண்:
காதல், திரி இன்றி எரிகின்ற தீ மாதிரி

(கிள்ளி கிள்ளி...)
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com