<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, April 08, 2004
 
#32 போர்முரசே போர்முரசே
வீசிடும் வார்த்தையெல்லாம் தலை சுற்றித் திறிய
மனது நோகுதடி
என் மனது நோகுதடி

ஊமைக் காயங்கள் இங்கு உறைந்து கிடக்கையில்
தழும்பிக் கேட்குதடி
குரல் தழும்பி கேட்குதடி

மூங்கில் பலகை
ஏறிடும் வரையில்
முயற்சி செய்திடுவேன்
தினம் முயற்சி செய்திடுவேன்

போர்முரசே போர்முரசே
முழங்குது இதயத்திலே
வாடிக்கையாய் வாழ்பவனை
நினைக்கின்ற நேரத்திலே
கண் இமைப்பதும் கடினம்
நீ தோன்றிடும் தருனம்
தீ கொழுந்துவிடும் எரியும் எரியும்
தனிமை நீங்கும்வரை எரியும் எரியும்

(போர்முரசே...

வெட்ட வெட்ட உறவது வளரும்
விறகென எரித்திட உதிரும்
சாம்பலா திருநீரா?

திட்டு திட்டாய் மலர்களில் படரும்
பனித் துளி தடமின்றி மறையும்
மலர் இதழ் தவிக்கும்

நினைவுகள் மலரா?
உறவுகள் பனியா?
களைத்திடும் கதிர் விதியா?

காதலின் முகத்தில்
மகிழ்விருந்தாலும்
அகத்தினில் துயர் கதியா?

(போர்முரசே...

கையிலிட்ட சந்தனமாய் மணக்கும்
நீ உன்னவளை நெருங்கிட தவிக்கும்
கணல் என்றே தகிக்கும்

சாறல் விழ நீர்குலங்கள் சிரிக்கும்
குமிழ்களாய்க் கொக்கறித்து களையும்
நம் காதலும் குமிழா?

நினைவுகள் சுமையா?
சுவைத்திடும் வலியா?
சிறைக்குள்ளே விடுதலையா?

இறப்பதும் மணப்பதும்
கால்கட்டில் முடியும்
நம் நிலை இதில் முதலா?

(போர்முரசே...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com