<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, April 08, 2004
 
#31 கார்முகிலோ
கார்முகிலோ. . .
கறையும் பொழுதோ. . .
கார்முகிலோ
கறையும் பொழுதோ
பெருமூச்சிடும் நிலமகளோ

வளைந்து பார்க்கும் வானவில்
மறைந்து பாடும் பூங்குயில்

உதாரணம் இலாததோர்
வினோதம் இந்த பேர் அழகோ

(கார்முகிலோ...

கற்பனை கோடி செய்தேன்
ஏட்டில் ஏற வில்லை
சொப்பனம் முழுதும் தேடி
பார்த்தேன் காண வில்லை

இத்தனை அற்புதங்கள் கட்டிய வித்தகன்
இடையில் நம்மையும் ஏன் விதைத்தான்?
வித்தையைக் கையிலே வைத்த கையுடன்
சர்ச்சையை நெஞ்சிலே ஏன் விதைத்தான்?

புனிதம் படைத்த பின்னே
கணிதம் கற்றுத்தந்தான்
கடலைத் தழுவச் சென்றால்
சிறகில் ஈரம் என்றான்

எடை பார்க்கும் போது எஞ்ஜியதேது?

(கார்முகிலோ...

வளைந்து பார்க்கும் வானவில்
மறைந்து பாடும் பூங்குயில்

சிந்தனை மூட்டும் தீயோ
திங்களை வாட்டும் நோயோ
வெண்ணிலா பூசும் மஞ்சல்
கர்ப்பனை ஆடும் ஊஞ்சல்

சிந்திய தேன்குடம் பெளர்ணமி சிரிக்க
சுவைக்கப் பார்க்குது அலை நாக்கு
சந்தனத் தேரென உச்சியில் உலவ
கவிதை கசிந்திடும் உள் நோக்கு

இருட்டும் வெளிச்சமும் இருபுரத்தில்
ஏற்றி இறக்கிடும் வானகமே
இந்த ஊமைக் காயம் விடைபெறும் நேரம்

இரவில் ஒலியும் வாழும்
பகலில் நிலவும் தோன்றும்
இங்கு ஏற்ற தாழ்வும் சரிசமமாகும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com