<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, April 08, 2004
 
#30 ஆழ்கடல் மேலே
ஆழ்கடல் மேலே
ஆழ்கடல் மேலே
பாய்மரம் போலே
நான் இருப்பேனே

(ஆழ்...

பூக்களை அடுக்கி மாளிகை அமைப்பேன்
பாக்களை வடித்து பூஜைகள் வைப்பேன்
கத்தைகள் கோடி பணம் கிடைத்தாலும்
தத்தையைப் போல சுகம் கிடைக்காது

(ஆழ்...

பிள்ளைபோல் உந்தன் வெண் மடி ஏறி
ஆனந்தமாக கால் அசைப்பேனே

கண்வலை வீசாமல் நான் விழுந்தேனே
கவிதையாய் ஆனாலும் காதுளைப்பேனே
ஆத்திரத்தில் வெட்கம் மீது போர் தொடுத்தேனே

(ஆழ்...

பெண்பால் அவளைப் பார்த்த நண் நாள்
என் பால் ஆசையும் ஊற்றெடுக்கும்
வெண்தாள் அவளைத் தந்துவிட்டால்
பேனா எந்தன் மை கசியும்

மல்லிகை முல்லை பனியெனப் பெய்யும்
கன்னிகை உந்தன் கால்வலிக்காக
மெத்தன நெஞ்சில் சொத்தென வைத்தும்
பித்தனைப் பார்த்து புன்சிரிப்பாயோ

வேடிக்கை பார்க்கும் ஆண் வாடிக்கை எனக்கில்லை
கேளிக்கை இல்லாமல் கொடுக்கின்றேன் காணிக்கை
எண்ணிக்கையில் இவனும் என்று நம்பிக்கை வைக்காதே

(ஆழ்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com