உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, April 08, 2004
#29 வானவில் எய்திடும் கணைதான் புஷ்பமா?
வானவில் எய்திடும் கணைதான் புஷ்பமா?
வாசனை இல்லாமலே மலர் மயக்குமா?
வாலிபத்தை நீக்கினால் வாழ்வு ருசிக்குமா?
(வானவில்...
நீரில்லாத பூமியில் வேர் வசிக்குமா?
போரில்லாத வாலிபம் படையெடுக்குமா?
(வானவில்...
அனைத்தால் பாவமா?
நீ அனையும் தீபமா?
வெட்கமா விசனமா?
சுற்றமா சூழலா?
தடைதான் யாரம்மா?
தனிமை நீங்குமா?
தன் இமையே நீங்குமா?
தன்னிலை காட்டுமா?
பொய்முகம் சூட்டுமா?
தவிப்பே மோகமா?
இந்த தவிப்பே மோகமா?
(வானவில்...
ஏங்கிடா ஏக்கமா?
போக்கிடா தூக்கமா?
உறவு ஏற்குமா?
புது வரவை வாழ்த்துமா?
ஆதியே அந்தமா?
கரணமா மரணமா?
விதிதான் கூறுமா?
மடிமேல் மோட்ச்சமா?
இல்லை மடிந்தே மோட்ச்சமா?
கறுவரை பாசமே?
மணவரை ஏற்றுமா?
கல்லரை நெசமா?
நாம் கல்லரை நெசமா?
(வானவில்...
Comments:
Post a Comment
