உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, April 08, 2004
#26 இசைநாடியே
இசைநாடியே
இங்கு உனக்காகத் துடிக்கும்
உயிர்காற்றைச் சுறக்கும்
முகம் இங்கே அகம் அங்கே
அறிவால் அறிவாய்
எனை தினம் உடலால் பிறிவாய்
தொடர்ந்திரு
இசைநாடியே
கலையாலே கிடைத்தாய்
வரம் கொடுத்து எடுத்தாய்
சுய நினைவின் திசை மாற்ற
மதுரசம் வசம் இருந்தேன்
வழிவகுத்துக் கொடுத்தாய்
கலையை விட உயர்ந்தாய்
கலையை விட உயர்ந்தாய்
கலைஞனுக்கு உயர் தாய்
சேய் என்று அழ
நான் நன்றி சொல்ல
கறை படிந்த குறை மறந்து
திரை விலக்கு
(இசைநாடியே...
ஆகாயமே ஒளியினில் மலர்ந்தும் மேகம் கதிரை மறைக்கும்
சாமான்யன் கலைச் சறிவினில் கூட கலையின் சாரம் தவிக்கும்
ஆதார சுருதி அந்து போனதடி அன்று உன்னைப் பிறிந்து
ஆவேச நிலை இன்று போனதடி உந்தன் வருகை தெரிந்து
பருகிடப் பெருகிடும் அமுத சுரபி
கலைஞனின் மனதில் இசை எனும் அருவி
காணாத இன்பமேது கலையின் மடியில் வாழும்போது?
காட்டாரு கலையின் பாதை கருணை என்றும் காட்டிடாது
கானம் போயும் மானம் போயும்
பாதை காட்ட போதை ஓட்ட
காப்பாற்ற வந்தாயே
(இசைநாடியே...
Comments:
Post a Comment
