உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
#25 ஊமை நாடகமோ
ஊமை நாடகமோ
கூடல் முன்னுரையோ
செந்தூரம் நீ சூட
பொன் மாலை பின்வாங்க
பொழுதும் எழுதும் முறையிடவே
(ஊமை...
சூலம் ஏந்தும் கையும் ஆழம் தேடும் உன்னால்
அன்பு கொண்டு எந்தன் நெஞ்சை ஆதரி
வேகம் கட்டுமீற மோகம் இட்டு காப்பேன்
ஆசைத் தீயில் என்னை மட்டும் சேகரி
தீவில் ஏற்றும் தீபமாய்
பாதை காட்டும் ஜோதியாய்
வாழ்வை மாற்றினாய்
எந்தன் தாழ்வை ஓட்டினாய்
அன்புக்குத் தானே ஆதாரப் பூக்கள்
நெஞ்சுக்குள் வேராய் நீ ஊன்றும் நாட்கள்
அஞ்சல் பெட்டி மூழ்கும் நமது வரியில்
(ஊமை...
கால்கள் நனைப்போர் பாதி மூழ்கிப்போவோர் மீதி
காதலென்னும் போதை ஊட்டும் பார்கடல்
மூழ்கிப் போனேன் உன்னில் முத்துக்குளித்தேன் என்னில்
மோகம் அறித்த முத்து கண்டோம் காதலில்
பாறை மீது பாசமே
அலைகள் வைத்து போகுமே
கொல்லும் ஆயுதம் உன்னால் தந்தமானது
பூவையின் கால்கள் பின்னும் நார் ஆவேன்
கால்கட்டில் தானே மலரும் பூ நானே
பூங்கா இனிமேல் உன்னை ஏந்தாது
(ஊமை...
Comments:
Post a Comment
