உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
# 23 மனது பொருந்திவிட்டால்
மனது பொருந்திவிட்டால்
உறவு சிறந்திருக்கும்
விருப்பு வெருப்பு எல்லாம்
கடந்து நிலைத்திருக்கும்
(மனது...
துறக்கச் சொல்வது வேதம்
திருந்தச் சொல்வது சமயம்
கடமையைச் சொல்வது கீதை
மூன்றையும் சொல்பவள் மனைவி
(மனது...
தனிமை காணாத உறவோ
இனிமை காணாத இரவோ
கடமை நிறைவேற்றத்தானோ
கொடுத்ததெல்லாம் கொடுத்தானோ
(மனது...
அருந்திட மருந்திடும் தேகம்
பகிர்ந்திட தெளிந்திடும் மோகம்
மணைமட்டுமா அவளாட்சி?
மனதிலுமே அரசாட்சி
பருவம் பொன்னந்தி வானோ?
குறுநகை மின்னல் தராதோ?
ஞாயிறும் திங்களும் மோதி
நல்கிய நாயகி நீயோ?
Comments:
Post a Comment
