உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
#21 சில்லரை மழையாய் குலுங்கிச் சிரிப்பாள்
சில்லரை மழையாய் குலுங்கிச் சிரிப்பாள்
கன்னக் குழிகளில் மனதை அடைப்பாள்
சந்தனச் சிலை ஒன்று வடித்தா
பிரம்மனும் உனையிங்கு படைத்தான்
மேனியே காதல் தோணியடி
வேகம் வேகம் இது வாலிப வார்த்தை தானே
மோகம் மோகம் அது உன்னைக் கண்டதும் தானே
கண்பார்த்தாய் கைகோர்த்தாய் நான் காதல் வயமானேன்
(சில்லரை...
போராடும் அலையில் சரியும் கரையாவேன் சம்மதத்தில் நிறைவாவேன்
நீராடும் பொழுதில் மேனியைப் போலாவேன் நீ ஒத்தட நீராவாய்
பூபாலம் கேட்கும் சமயம் அருகில் தினமும் இருந்துவிடு
நீலாம்பரி பாடி சுகமாய் இரவில் என்னைத் தூங்கவிடு
பூர்வீகம் கேட்டால் அருவிக்குத் தெரியாது ஒரு பிறப்பிடம் அதற்க்கேது
நம் காதலும் அதைப்போல் மூலத்தை அறியாது ஆழத்தில் குறையாது
பருவக் குகையே உன்னில் என்னை கொஞ்ச நேரம் ஒளியவிடு
பதட்டம் ஏனோ மலரில் பனிபோல் எனை கொஞ்சம் தேங்கவிடு
(சில்லரை...
Comments:
Post a Comment
