உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
#20 சந்திரன் சிரிக்கும்
சந்திரன் சிரிக்கும்
நேரம் முழுக்க
ஏங்கி கிடக்க
எனக்கேன் உறக்கம்
உன் சொல்லில் உறுதி
கண்டாள் ஒருத்தி
தந்தால் நிறுத்தி
தன்னையே பரிசா
காதுப் படிகள் இறங்கி
வார்த்தைகள் சொகுசா
வாக்குகள் வழங்க
காதலின் சபையில்
ஜோதிகள் எரிய
நெஞ்சிலே கலந்து
நிம்மதி நிலவ
தூக்கம்தான் வருமோ சகியே
(சந்திரன் சிரிக்கும். . .
உள்ளத்தில் விரிசல்
காதல் சுவையும்
கேள்விக் கணையும்
கலந்தே ஒலிக்கும்
சந்தர்ப்ப விருந்தா
காதல் மருந்தா
இளமை அருந்த
இருவர் உடந்தை
சந்தம் சொல்லையே இழக்கும்
மோகனப் பொழுதில்
ஆதவன் மறைவில்
காரியம் புரிய
மாதிரி எதற்கு
பாதைகள் வரைய
பருவம்தான்
இருக்கே துணையா
(சந்திரன் சிரிக்கும். . .
Comments:
Post a Comment
