உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
#2 தென்னை சாய்வதும் ஏன்
தென்னை சாய்வதும் ஏன்
உன் தோற்றம் வணங்கிடவோ?
அலைகள் தோய்வதும் ஏன்
உன் பாதம் தொழுதிடவோ?
வார்த்தைகளாலே மயக்கிடத்தானா என்னை வரவழைத்தாய்
வார்த்தைகள் மீதே காதல் கொண்டேனே உன்னை பார்த்ததில்தான் உன்னைப் பார்த்ததில்தான்
வானவில் வீசிய
வாசனை அம்பு மடிமேல் வீழ்ந்ததிங்கே மடிமேல் வீழ்ந்ததிங்கே
கதிரை வடித்து பனியுள் ஒளித்து
ஒத்தடம் செய்வதுபோல்
உந்தன் சுக உறவே
காகித ஓலை கண்களுக்குள்ளே
கனவலை அடிக்கிறதே?
விளக்குக் கூண்டாய் உன் நினைவாக
படகாய் ஆனேனே
தனிமையில்தானே உணரவந்தேனே
தனிமையில்தானே உணரவந்தேனே
உலகத்தில் என் நிலையை
ஆகா, எந்தன் உலகினையே
Comments:
Post a Comment
