<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
 
#19 சிந்தனையை மூட்டு
சிந்தனையை மூட்டு
சங்கதியைக் காட்டு
சங்கதியும் தீர்ந்தா
கற்றுக்கொள்ளு கேட்டு

பொன்னான கலையப்பா
வீணாகி வருதப்பா
கண்ணான கவிஞர்கள்
இல்லாத நிலையப்பா

பை நிறையப் பணமப்பா
பெருந்தலை கணமப்பா
வெட்கம் மானம் எல்லாமே
விற்று விட்ட கவியப்பா

தமிழ் கொலையப்பா கொலையப்பா கொலையப்பா. . .

இவன் கிண்டலுக்கு கவிஞனப்பா
காசு சில்லரைக்கு அடிமையப்பா
அன்று நல்ல கவிதானப்பா
சீரழிந்ததேனப்பா
வீராப்பாய் அழித்தது வார்த்தையின் கற்பப்பா

(சிந்தனையை மூட்டு

| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com