உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
#18 வாசல் வெளியே கிடப்பாளே
வாசல் வெளியே கிடப்பாளே
வானவெளியில் மிதப்பாளே
வண்ணக் கோலம் தேசிய கீதம் போன்றவளா?
கண்ணைப் பறிச்சு நெஞ்சில் நிறையும் பூ மகளா?
பத்துப் பாட்டை படிச்சிருந்தாதான்
பார்க்க அழகா இருந்திருந்தாதான்
கவிதை வருமா
காதல் வருமா
இள மனம் தினம் ஏங்கிக் கெடுமா
(வாசல்...
சென்னைச் சாலைகளை பழகிய கால்கள்
சரித்திர இடங்களில் பதியட்டுமே
அண்டை நாடுகளின் அவசரக் காற்றில்
மல்லிகை முல்லை உதிரட்டுமே
நம் சொந்தத்தை
கொண்டாடவே
அந்நிய செலாவணி
இருந்தாக்கூட பத்தாதடி
பீசா கோபுரம் சாய்கின்றதேன்
கூட்டத்தில் உன்னைத் தேடிடுதோ?
என் கைகளில் சாய்ந்தாடவா
உந்தன் கூந்தலே தொங்கும் தோட்டமோ?
தாங்கிப் பிடித்திட ஆள்வேண்டுமோ?
சீனச் சுவர் போதாதம்மா
கர்த்தர் மாலை போட்டதில்லை
கந்தர் சஷ்டி கேட்டதில்லை
மண்டியிட்டும் தொழுததில்லை
உன் அன்புக்கு மட்டுமே அடிபணிவேன்
(வாசல்...
Comments:
Post a Comment
