<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
 
#17 பழமுதிர்ச் சோலையோ
பழமுதிர்ச் சோலையோ
மலரேந்தும் ஓடையோ
சோதனை செய்யவோ
சந்தேகம் தீருமோ

பழமுதிர்ச் சோலையோ
மலரேந்தும் ஓடையோ

மாதம் சேதம் மறுக்காதே
வருடம் தேய வருத்தாதே
குறுகுறு பார்வையில் மலர் இதழ்கள் பணிந்திட
வளர்ந்திடும் ஆசையில் என் இரவுகள் நனைந்திட

சேலை இடைவெளி இடையினில் எனக்கென இருக்கையில்
விரல்கள் பதித்துக் கரைகள் அகற்றத் தூண்டும்

(பழமுதிர்ச் சோலையோ...

பாலை மழை போல் பொழிவாயோ
வாழை உடலால் இழைவாயோ
பிறிந்திடும் பொழுதெலாம் நான் இயங்கிடும் இயந்திரம்
உன்னுடன் கலந்ததும் உயிர் சுடர்விடும் சுதந்திரம்

மாலைக் கறுக்கலும் மயக்கிட நிலவொளி சுறந்திட
இரவின் மடியில் இருவர் ஆடும் ஊஞ்சல்

(பழமுதிர்ச் சோலையோ...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com