உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
#12 உண்மை உணர்வாளோ
உண்மை உணர்வாளோ
அவள் கோபத்தினால் முகம்
சிவக்கின்றபோதும்
உள்ளுக்குள் ரசிக்கின்றாள்
(உண்மை உணர்வாளோ
சீறிடும் பார்வை
என்னைச் சுடுகையில்
பெளர்ணமி அலையானேன்
அந்த கிளர்ச்சியின் அடிப்படை
காரணம் என்ன
காதலின் வசம்தானே
(உண்மை உணர்வாளோ
உதட்டினில் ஆசை
ஊர்வதை மறைக்க
ஆத்திரச் சாயமிட்டாள்
காதல் சாத்திர நாடக
மேடையிலே அவள்
பாத்திரம் தேடுகிறாள்
(உண்மை உணர்வாளோ
Comments:
Post a Comment
