உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
#11 கிள்ளியெரிஞ்ச முல்லை மலரின்
கிள்ளியெரிஞ்ச முல்லை மலரின்
பேருக்கு மூலம் இல்லை
காம்பின் பெயரை கண்டு பிடிச்சும்
ஒட்ட முடியவில்ல
அங்க விட்ட குறையுமில்ல
கல்லரை மலருக்கு மணமேடை எங்கே?
காகித மலருக்கு வாசனை எங்கே?
பறித்தவன் கைகளில் பூ சிரித்தாலும்
காம்பினைக் கண்டதும் கலங்குது இங்கே
கள்ளிச் செடியால் பிள்ளை உயிரை
கிள்ளலையே ஏன் ஏன்?
(கிள்ளியெரிஞ்ச...
கண்ணென்றும் இமையென்றும் போற்றிட வேண்டாம்
ஊருக்கு முன்னே சீராட்ட வேண்டாம்
மகள் என்று என்னை ஒரு முறையேனும்
அழைத்திடு தாயே அதுவே போதும்
வாசலில் வீழ்ந்த நேற்றைய சேதி
தூக்கி எரி நீ நீ
(கிள்ளியெரிஞ்ச...
Comments:
Post a Comment
