உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
#10 பல்லாக்கு போல ஒன்னோட நெனவை
பல்லாக்கு போல ஒன்னோட நெனவை
நெஞ்சோடதான் ஏந்துறேன்
பகல் சாயும் நேரம்
விடியாத மோகம்
மடியாமதானே வாட்டுது
பல்லாக்கு போல ஒன்னோட நெனவை
நெஞ்சோடதான் ஏந்துறேன்
மண்ணுக்கொரு நீரூற்றென
விண்ணுக்கொரு வைரம் என
பள்ளத்தினில் வெள்ளம்போல் வந்தாயம்மா
கத்திக் கதற
ஆள் இல்லையே
கொஞ்சிக் குலவ
நீ இல்லையே
பித்தம் அது நித்தம் வரும்
உன் ஞாபகம்
கனவோடு நின்றால் தாங்காது கண்ணே
களவாடிச் சென்றான் உன் காலம் முன்னே
காத்தோட போச்சு கடன்வாங்கும் மூச்சு
Comments:
Post a Comment
